நான் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. எல்லோரிடமும் நான் சமமாகவே இருக்கிறேன் - கிருஷ்ணர்

Tuesday 8 June, 2010

எது முக்கியம்?

"சாமநாலு வேதமும் சகலசாத் திரங்களும்
சேமமாக ஓதினும் சிவனைநீர் அறிகிலீர்
காமநோயை வீட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின்
ஊமையான காயமாய் இருப்பனெங்கள் ஈசனே".
- சிவவாக்கியர்.

ஆசை வலைக்குள் சிக்கி அகப்பட்டுகிடக்கும் மாந்தர், சாத்திர தோத்திரங்களை ஓதுவதால் மட்டும் எவ்விதப் பயனுமில்லை என்கிறார். காம இச்சைகளை விட்டு நீங்கும் நெஞ்சில், இறைவன் முந்தி வந்துறைகிறான், என்கிறார். அதுமட்டுமில்லாது, இறைவழிபாடிர்க்காக சிலர் செய்யும் அறியாமைச் செயல்களைத் தன்னில்வலப் படுத்திக் கொண்டு எள்ளி நகையாடுகிறார்.

No comments:

Post a Comment