நான் யாருக்கும் பாரபட்சம் காட்டுவதில்லை. எல்லோரிடமும் நான் சமமாகவே இருக்கிறேன் - கிருஷ்ணர்

Thursday 28 October, 2010

பூஜையின் போது மணி அடிப்பது ஏன் ?

பூஜை ஆரம்பிப்பதற்கு முன்னால் மணி  அடித்தால், அந்த மணி சப்தம் கேட்டதும் வீட்டிலுள்ள துர் தேவதைகள் போன்றவை வெளியே ஓடிவிடும். துர்தேவதை, பேய், பிசாசு போன்றவைகளுக்கு மணி சப்தம் கேட்டால் பயம்; எனவே, ஓடி விடும். அதனால், மணியடித்து அவைகளை விரட்டி விட்டு பூஜையை ஆரம்பிப்பர்.  ஒவ்வொரு நாளும் ஏன் இப்படி அடிக்க வேண்டும் என்றால், ஓடிப்போன துர்தேவதைகள் இருட்டிய பின் மீண்டும் வந்து விடும். மறுநாள், மறுபடியும் மணியடித்து விரட்ட வேண்டும். அவை இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே என்றால், அவை இருக்குமிடத்தில் தேவதைகள் வரமாட்டார்கள்! அதனால், மணியடித்துதான் தினமும் பூஜையை ஆரம்பிப்பது வழக்கம்.  கிராமங்களில் கூட இந்த துர்தேவதைகள் சுற்றிக் கொண்டே இருக்கும். ஆலயங்களில் காலை, மாலை மணியடிக்கும் போது, இந்த சப்தம் கேட்டதும் அந்த துர்தேவதைகள் ஓடி விடும். மறுபடியும் எப்போது திரும்பி வரும் என்று யாரும் சொல்லவில்லை. இருந்தாலும், அவை வந்து விடும் என்று மட்டும் சொல்கின்றனர்.
மற்ற மாதங்களை விட மார்கழி மாதத்துக்கு சிறப்பு அதிகம். அந்த மாதம் முழுவதும் பகவானுக்கு உகந்த நாட்கள். அதனால், மார்கழி மாதத்தில் எல்லாரும் விடியற் காலையில் எழுந்து நீராடி, நெற்றிக்கிட்டு, தெய்வ பூஜையில் ஈடுபடுவர்; ஆலயங்களுக்குச் செல்வர். இம்மாதத்தில் தெய்வ வழிபாடு மும்முரமாக இருக்கும்.  கிராமங்கள் என்றில்லாமல் நகரங்களிலும் இப்படி நடக்கிறது. கிராமங்களில் மார்கழி மாதம் முழுவதும் பிரதி தினம் விடியற் காலையில் ஒவ்வொரு தெருவாக சங்கு ஊதிக் கொண்டும், மணியடித்துக் கொண்டும் வருவர். அதற்கென்று மணியடிப்பவர், சங்கு ஊதுகிறவர் உண்டு. அவர்கள் அதை தினமும் செய்வர்.  இதனால், கிராமத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் துர்தேவதைகள் ஓடிவிடும். கிராமம் நோய் நொடி இல்லாமல் சுபிட்சமாக இருக்கும் என்று சொல்வர்.

Friday 22 October, 2010

குலத்துக்கும், குணத்துக்கும் சம்பந்தம் உண்டா?

ஒருவனுடைய நன்னடத்தை, நல்ல சுபாவம் இவைகளைக் கொண்டே அவன் நல்ல குலத்திலும், நல்ல குடும்பத்திலும் பிறந்தவன் என்பதை அறிந்து கொள்ளலாம். எந்த மனிதனும் தான் பிறந்த குலத்திற்கு தகுந்த குணங்களையே கொண்டிருப்பான். "அவரை போட்டால், துவரை முளைக்குமா?" என்பர்.
                            ஒரு குருட்டு பிச்சைகாரனை ராஜாவின் முன் கொண்டு வந்து நிறுத்தினர் சேவகர்கள். பிச்சை எடுப்பது குற்றம் என்பது அங்கே சட்டம். அவனை விசாரித்த ராஜா, உனக்கு என்ன தெரியும்? என்று கேட்டான். 'எனக்கு மாணிக்ககல்லை பரிசோதிக்கத் தெரியும்; குதிரைகளை பரிசோதித்து  நல்ல ஜாதிக் குதிரை தானா என்று சொல்ல முடியும்; மனிதர்களின் தன்மையை அறிந்து, அவர்கள் நல்ல குலத்தை சேர்ந்தவர்களா என்பதையும் சொல்லமுடியும்!" என்றான் பிச்சைக்காரன்.
                              'சரி! இவனுக்கு தினமும் ஒரு பட்டை சோறு கொடுத்து, சிறையில் வையுங்கள்!' என்று உத்தரவிட்டான் ராஜா. ஒரு நாள் மாணிக்ககல் கொண்டு வந்தான் இரத்தின வியாபாரி ஒருவன். அந்தக் குருடனை விட்டுப் பரிசோதிக்கச் சொன்னான் ராஜா. தன் காதுகளில் கல்லை வைத்துப் பார்த்து விட்டு, "இது மாணிக்ககல் அல்ல! இது ஒரு பூச்சிக் கூடு !" என்றான் குருடன். வியாபாரி போனபின் இதை எப்படிக் கண்டுபிடித்தாய்? என்று கேட்டான் ராஜா." மாணிக்கல்லானால் காதில் வைத்தால் ஓசை எதுவும் வராது; பூச்சிக் கூடானதால் காதில் வைத்ததும் 'ஞொய்' என்ற சப்தம் வந்தது, அதனால் கண்டுபிடித்தேன்... என்றான் குருடன். 'சபாஷ்! தினமும் இவனுக்கு இரண்டு பட்டை சோறு கொடு..' என்று உத்தரவிட்டான் ராஜா.
                             மற்றொரு நாள், ஒரு அழகிய குதிரையை கொண்டு வந்தான் குதிரை வியாபாரி ஒருவன். குருடனை விட்டுப் பரிசோதிக்கச் சொன்னான் ராஜா. குதிரையின் முதுகில் கைவைத்த குருடன், 'இது அசல் ஜாதிக் குதிரை அல்ல......' என்றான். இதை எப்படிக் கண்டுபிடித்தாய்? என்று கேட்டான் ராஜா.ஜாதிக் குதிரையானால், முதுகில் கைவைத்ததும் உடலை சிலிர்க்கும். இது சொரணையே இல்லாமலிருந்தது. அதனால் கண்டுபிடித்தேன்!' என்றான். சபாஷ்! தினமும் இவனுக்கு மூன்று  பட்டை சோறுகொடுங்கள்! என்றான் ராஜா. பிறகு ஒரு நாள், குருடனிடம், தான் எப்படிப் பட்டவன் என்பதை சொல்லும்படிக் கேட்டான் ராஜா. 'மகாராஜா நான் சொல்வேன்! ஆனால்..நீங்கள் கோபப்படக்கூடாது...' என்றான் குருடன். ராஜாவும் சரி என்றான்.மகாராஜா நீங்கள் ஒரு சமையல் காரருக்கு பிறந்தவர்; ராஜாவுக்குப் பிறக்கவில்லை. கோபிக்ககூடாது!" என்றான் பயந்து கொண்டே. நேராக தன் தாயிடம் போய் விசாரித்தான் ராஜா. அரண்மனை சமையல்காரனுக்கு இவன் பிறந்ததாக தெரிந்து கொண்டான்.
                                                     குருடனிடம் வந்து 'உண்மை தான்! இதை நீ எப்படி தெரிந்து கொண்டாய்?' என்று கேட்டான் ராஜா. ஒ அதுவா! ராஜாவுக்குப் பிறந்து, ராஜவம்சத்தில் பிறந்தவன், பிறரைப் புகழ்ந்து பரிசளிப்பதானால், பொன்னைக் கொடு, பொருளைக் கொடு என்பான்; நீங்கள் எப்போது பார்த்தாலும்,
ஒரு பட்டை சோறு,இரண்டு பட்டை சோறு,மூன்று பட்டை சோறு' என்று பட்டை சோறாகவே பரிசளித்தீர்கள். சமையல்காரனுக்குத் தான் பட்டை சோறு ஞாபகம் வரும்; அதனால், நீங்கள் சமையல்காரன் மகனாக இருக்க வேண்டும் என்று யூகித்தேன்!' என்றான். ராஜாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. குருடனுக்கு வெளியூரில் வசதியாக வாழ, வழி செய்து அனுப்பி வைத்தான்.
                                                 குலத்தையும், குடும்பத்தையும்  பொருத்துத் தான் பிள்ளைகளும் இருப்பர்' என்பதைச் சொல்ல இப்படி ஒரு கதை உண்டு.ஒரு சில விதி விலக்கும் இருக்கலாம். அனுபவத்தில் கானவேண்டியவை இவை! பக்தியும், ஆசாரமும் உள்ள குடும்பத்தில் அதற்கேற்ற பிள்ளை!. தன்னுடைய ஊழ்வினைக்கேர்ப்பவே பிள்ளைகளும் அமையும்.

Saturday 9 October, 2010

ஆகாரத்தை குறையுங்கள். பகவானை நினையுங்கள்!


இந்தக் கலியுகத்தில், உயிர் வாழ்வதற்கு உணவு அவசியம். மனிதனாகப் பிறந்தவன் குறிப்பிட்டகாலம் வரை வாழ்கிறான். அந்தக் காலத்தில் அவன் நற்காரியங்களையும், தெய்வ வழிபாட்டையும் சிரத்தையுடன்  செய்து, சில தர்மங்களை அனுஷ்டித்து வந்தால் அதுவே மோட்ச சாதனம்.
அந்தக் காலத்தில் முனிவர்கள் காற்றையே புசித்து தவம் செய்தனர். அதன் பின்னர், சிலர் தயிர், தண்ணீர் இவைகளைப் புசித்தனர். பின்னர், காய், கிழங்கு, பழம் இவைகளைப் புசித்துக் கொண்டிருந்தனர். அதன் பிறகு வந்தவர்கள், தானியங்கள், இலை, காய், பழம் இவைகளை புசித்தனர். அதன் பிறகு வந்தவர்கள், தானியங்களை வேக வைத்தும், சில தானியங்களை மாவாக்கியும், காய், கிழங்கு, இலை இவைகளையே வேக வைத்து, புசித்து நல்ல காரியங்களில் ஈடுபட்டனர். இவர்களெல்லாம் உயிர்வாழ்வதற்குத் தேவையான ஆகாரத்தை அளவோடு உண்டு, பல காலம் திடமாக வாழ்ந்தவர்கள்.
                                  காலப்போக்கில், நாகரீகம் வளர, வளர ஆகாரத்தின் வகைகளும், ருசியின் ஆசையும் அதிகமாயிற்று. ஒரு நாளைக்கு ஒரு வேளை என்றிருந்து போய், ஒரு நாளைக்கு இரண்டாகி, மூன்றாகி, நாலு, ஐந்து, ஆறு என்றாகியது. நம் பெரியோரும், யோகிகளும் உலகநன்மையை உத்தேசித்து  உயிர் வாழ்வதற்காக சாபிட்டனர். இப்போது ஒரு சிலரைத் தவிர, எல்லாருமே சாப்பிடுவதற்காகவே உயிர் வாழ நினைகின்றனர்.
                 
அந்தக் காலத்தில் நல்ல காரியம் செய்வதையே குறிகோளாக கொள்வர்; பசி, தாகம் எதையும் கவனிக்க மாட்டார்கள்.இப்போதெல்லாம் பசி தாங்கார், சதா சாப்பிட வேண்டும், இரவெல்லாம் கண்விழித்து, சினிமா, நாடகம், சூதாட்டம் இப்படிபட்டவைகளில் ஈடுபட்டு தீவினைகளை உண்டாக்கும் செயல்களிலேயே கண்ணும் கருத்துமாய் உள்ளனர்.
                                பகவத் பக்தியிலும், தெய்வ வழிபாட்டிலும் ஈடுபட்டால் ஆன்ம விடுதலைக்கு வழி பிறக்கும்.  கேளிக்கைகளிலும், சரீர சுகத்திலும் ஈடுபட்டால் விடுதலை எப்படி கிடைக்கும்?......... ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது,' என்ன சார்! சாப்டாச்சா? ' என்று கேட்டதும், அவர், ' ஒ! இப்பதான் ஆச்சு!' என்று சொல்வார். ' என்ன சார்! இன்னைக்கு கோவிலுக்குப் போயிருந்தீர்களா, ஜெபம் ஆயிற்றா?" என்று யாரும் விசாரிப்பதில்லை. அப்படிச் செய்ததாக யாரும் சொல்லுவதுமில்லை. இந்த சரீரமும், வாழ்கையும் சப்பாடுக்காகவே ஏற்பட்டதாக நினைகின்றனரோ! என்று தோன்றுகிறது.
                                      
                                                  நாயன்மார்களும், ஆழ்வார்களும், மகான்களும், பகவானைத் துதித்து,' பகவானே! உன்னை நினையாத  நாட்களும், உன்னை துதிக்காத நாட்களுமே நான் பட்டினி கிடந்த நாட்களாகும்...' என்று உள்ளமுருகி பேசுகின்றனர். சாப்பாட்டை விட, இறைவனின்  நினைப்பும், அவனது சேவையுமே உயர்ந்ததென்று கருதினர்; முக்தியும் பெற்றனர்.
ஆகாரத்தை குறையுங்கள். பகவானை நினையுங்கள். நிம்மதி கிடைக்கும். 'முக்திக்கும் வழி பிறக்கும்'.

Wednesday 6 October, 2010

மஹாளய அமாவாசை

Tuesday 5 October, 2010

பசித்தவர்க்கு உணவளியுங்கள்

* கடவுள் ஒருவரே. அவரே அருட்பெருட்ஜோதியாகத் திகழ்கிறார். தனிப்பெருங்கருணையோடு நம்மைக் காத்தருள்கிறார்.
* உயிர்க்கொலை செய்வதும், அவ்வுயிர்
களின் புலாலைப் புசிப்பதும் அறவே கூடாது.
* கண்ணில் காணும் உயிர்களை எல்லாம்
தன்னுயிராக மதித்து வாழ்வதே ஆன்மநேய ஒருமைப்பாடு ஆகும். இதை எல்லா மக்களும்
கடைபிடிக்க வேண்டும்.
* ஏழைகளின் பசிப்பிணி போக்குவதே ஜீவகாருண்யம். இந்த ஒழுக்கம் ஒன்றே பேரின்ப வீட்டின் திறவுகோல். பசித்த வயிறுக்கு உணவளித்தவன் பெரும்
புண்ணியத்தை அடைவான். நோய்நொடிகள் அவனை விட்டு விலகும். நீண்ட ஆயுள் உண்டாகும்.
* எதற்காகவும் கோபம் கொள்வதோ, பொய் சொல்வதோ, பிறர் நலன் கண்டு பொறாமை கொள்வதோ கூடாது.
உரத்துப்பேசுவது, விவாதம் செய்வது, வழக்கிடுவது, பிறரிடம் சண்டையிடுவது கூடாது.
* பதட்டம் கொள்வதால் பிராணவாயு அதிகமாகச்
செலவாகும். எனவே, எச்செயலையும் நிதானத்துடன் அணுகுவதே சிறந்தது.
வள்ளலார்
(இன்று வள்ளலார் அவதரித்த தினம்)